தமிழக மீனவர்கள் 10 பேர் நிபந்தனையுடன் விடுதலை

0
94

தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. அவ்வகையில் கடந்த மாதம் 23-ம் தேதி 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் பருத்திதுறை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 10 மீனவர்களுக்கும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் அவர்களை நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும் என்றும், அப்போது படகு உரிமையாளர் ஆஜராகவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் உடைமைகளை மீண்டும் ஒப்படைக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here