உத்திரபிரதேசம் மாநிலம் சம்பால் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி கோவில் அடிக்கல் நாட்டு விழாவானது பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கோவில் வழிபாட்டுத் தலமாகவும், கலாச்சார மரியாதைக்குரிய இடமாகவும், இந்தியாவின் பல்வேறு ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியதாகவும் திகழும். இப்படி சிறப்புமிக்க இக்கோவிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு ஆச்சார்யா பிரமோத் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 19-ம் தேதி ஸ்ரீ கல்கி கோயிலுக்கு அடிக்கல் நாட்ட செல்கிறார். மேலும் பிரதமரின் வருகைக்காக அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றவுள்ளது.