சிங்கப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ‘டெல்லி சலோ’ என அறைகூவல் விடுத்த பகுதி, : தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

0
172

தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் உள்ள பதாங்கில் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான மைதானங்கள் அமைந்துள்ளன. இங்கு, 1,800ம் ஆண்டில் இருந்து பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
ஆங்கிலேயர்கள் சிங்கப்பூரில் தங்கள் காவல் நிலையத்தை நிறுவியபோது, இந்திய சிப்பாய்கள் முதன்முதலில் தங்கள் முகாம்களை பதாங்கில் தான் நிறுவினர்.
இங்கிருந்து தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஐ.என்.ஏ., எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரிடம் பல உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.
1943 ஜூலையில் இங்கிருந்து தான் ‘டெல்லி சலோ’ என அவர் முழங்கினார். ‘ராணி ஆப் ஜான்சி’ படைப்பிரிவையும் இங்கு தான் நிறுவினார்.
எனவே, அதற்கு மரியாதை செலுத்தும் விதமாக, 200 ஆண்டுகள் பழமையான பதாங், சிங்கப்பூரில் உள்ள 74 தேசிய நினைவுச் சின்னங்களுடன் இணைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here