இந்தியா பூடான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

0
66

பூடான் சென்ற பிரதமர் மோடியை கர்பா நடனம் ஆடி இளைஞர்கள் வரவேற்றனர். இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமர் டிஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை வரவேற்றார். இதனைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பள்ளி சிறுவர், சிறுமிகள் இந்தியா, பூடான் தேசிய கொடிகளை அசைத்தபடி வரவேற்பு அளித்தனர்.பிரதமரை வரவேற்கும் விதமாக பாரோவில் இருந்து தேசிய தலைநகர் திம்பு வரை சுமார் 45 கிமீ தூரம் மக்கள் தெருக்களில் அணிவகுத்து நின்றனர். பிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு அவர்கள் நடனம் ஆடினர்.பின்னர் அங்கு கூடியிருந்த புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் பூடான் மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பூடான் பிரதமர் டிஷெரிங் டோப்கே முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here