விவேகானந்தர் நினைவு தினம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

0
69
சுவாமி விவேகானந்தரின்நினைவு தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விவேகானந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து  தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சுவாமி விவேகானந்தர் சமாதியடைந்த நினைவு நாளில் அவருக்கு ஆழ்ந்த நன்றியுடனும் மரியாதையுடனும் தேசம் இதயபூர்வ அஞ்சலி செலுத்துகிறது.

அவர் பாரதத்தின் அனைத்தையும் உள்ளடக்கிய தர்மத்தின் அழகையும் ஆழத்தையும் உலகிற்கு சக்திவாய்ந்த முறையில் நிரூபித்தார்.

மேலும் பல நூற்றாண்டுகள் அந்நிய ஆளுகைகளின் போது அழிக்கப்பட்ட தேசிய பெருமையை இந்தியர்களிடையே மீண்டும் தட்டியெழுப்பினார். இது காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலைக்கு வழிவகுத்த தேசத்தை வலுப்படுத்த உதவியது.

அவருடைய ஆன்மிக பயணம் தமிழ்நாட்டின் புண்ணிய பூமியுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருந்தது. அங்கு அவர் ஞானமும் தேசிய நோக்க சிந்தனையையும் பெற்றார். #வசுதைவகுடும்பகம் என்ற லட்சியத்துடன், பொருள் வளமும், ராணுவ வலிமையும், ஆன்மிக இரக்கமும் கொண்ட உண்மையான வளர்ச்சியடைந்தபாரதம் என்ற அவரது கனவை நனவாக்குவோம் என இந்த நன்னாளில் நம்மை அர்ப்பணிப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here