வாஞ்சிநாதனுக்கு ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் அஞ்சலி.

1
431

ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் வாஞ்சிநாதன் நினைவை போற்றி வாஞ்சி மணியாச்சி ரயில்நிலையத்தில் நினைவுஅஞ்சலி செலுத்தினர்.

ஆர்எஸ்எஸ் பேரியக்கம் பாரதம் முழுவதும் உள்ள தியாகிகளின் வீர வரலாற்றை சொல்லி நல்ல தேச பக்தர்களை உருவாக்கி வருகின்றது. மேலும் எந்த ஒரு தேசபக்தர்களின் வரலாறும் சமுதாயத்தில் மறுதலிக்காமல் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு கொண்டு சேர்க்கும் விதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இன்று வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுகொன்று விட்டு தன்னையும் மடித்து கொண்ட தினம். அதன் நினைவாக ஸ்வயம்சேவகர்கள், ஆர்எஸ்எஸ் சார்பில்  தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் சந்திப்பில் சுதந்திரப் போராட்ட தியாகி வீர வாஞ்சிநாதன் அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.

1 COMMENT

  1. Hello there, just became alert to your blog through Google,
    and found that it is really informative. I’m going to watch out for brussels.
    I’ll be grateful if you continue this in future. A lot of people will be
    benefited from your writing. Cheers!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here