சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார். மௌனம் காக்கும் மாதர் சங்கம்.

0
393

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் சிவகாசியில் பாதிரியார் கைது.


சிவகாசியில் நேருஜி நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (43). அவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிருத்துவ தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார்.

அண்மையில் அவரை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். அப்போது அக்குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாதிரியார் கிறிஸ்துதாஸ் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுப்பற்றி சிறுமி பெற்றோரிடம் கூற, அவர்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார், போக்ஸோ சட்டத்தில் அந்த கிருத்துவ பாதிரியாரை கைது செய்தனர்.

இதனை பற்றி எந்தவொரு எதிர்ப்பையும் மாதர் சங்கம் தெரிவிக்குமா என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here