இஸ்லாமிய பயங்கரவாதிகளான தாலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் முகத்திரையை கிழிக்க வேண்டும் – உத்திரபிரதேச முதல்வர் யோகி.

0
229
இஸ்லாமிய பயங்கரவாதிகளான தாலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவோர் முகத்திரையை கிழிக்க வேண்டும் - உத்திரபிரதேச முதல்வர் யோகி.

தலிபான் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்நிலையில், தலிபான்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடுகிறார்கள் என்றும் ஆப்கன் மக்களும் அவர்களின் தலைமையின் கீழ் இருக்க விரும்புகின்றனர் என்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷபிக்குர் ரஹ்மான் பர்க் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உத்தரபிரதேசம் சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறும் போது, ‘‘தலிபான் பயங்கரவாதிகள் ஆதரவாக சிலர் பேசுகின்றனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தலிபான் பயங்கரவாதிகள் கொடுமைகள் இழைக்கின்றனர். போராட்டம் நடத்தும் சொந்த நாட்டு மக்களையே தலிபான்கள் சுட்டுக் கொல்கின்றனர்.

ஆனால், இங்கே சிலர் வெட்கமே இல்லாமல் தலிபான்களுக்கு ஆதரிக்கின்றனர். தலிபான் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here