சாதனா அறக்கட்டளை முப்பெரும் விழா  மற்றும் நூல் வெளியீட்டு விழா

0
49

திருச்சியில் சாதனா அறக்கட்டளை கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சேவை பணிகளை சமுதாயத்திற்கு செய்து வருகிறது இதனுடைய ஆண்டு விழாவானது ஆண்டுதோறும் முப்பெரும் கொண்டாடப்படுகிறது   இந்த ஆண்டு திரு இரா.வன்னியராஜன்  அவர்களால் தமிழில் எழுதப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாறு நூல் மற்றும் திரு சுந்தர் அவர்கள் எழுதிய மனித குல மேன்மைக்கு மகத்தான ஐந்து வேள்விகள் நூல் வெளியீட்டு விழா   நடைபெற்றது. டாக்டர் ஜி வாழ்க்கை வரலாற்று நூலை ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென் தமிழக மாநில செயலாளர் திரு சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட கோட்டத்தலைவர் திரு சம்பத்  பெற்றுக்கொண்டார். மற்றும் மனித குல மேன்மைக்கு மகத்தான ஐந்து வேள்விகள் நூலை சாதனா அறக்கட்டளை  அறங்காவலர் திரு அரங்கவரதராஜன் அவர்கள் வெளியிட திருச்சி நகர் தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here