ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 85 இந்தியர்கள் மீட்பு.

0
164

ஆப்கனில் இருந்து மேலும் 85 இந்தியர்களை மீட்டுக்கொண்டு, இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-130 ஜே விமானம் காபூலில் இருந்து கிளம்பியது.


ஆப்கனில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கிருந்த இந்திய தூதர், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், காபூலில் சிக்கித் தவித்த மேலும் 85 இந்தியர்களுடன், விமானப்படைக்கு சொந்தமான சி-130 ஜே விமானம் காபூலில் இருந்து கிளம்பியது. தற்போது 150 முதல் 180 இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17 விமானம் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here