இயற்கை பொருட்களை கொண்டு விநாயகர் சிலை தயாரிக்க சத்குரு வேண்டுகோள்.

0
870

விநாயகர் சதுர்த்திக்கு பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை, இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டுமென, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.


உலகின் பல இடங்களிலும், விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கியப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகையின்போது நாம் வணங்கும் விநாயகர் சிலைகளை, மண், சிறுதானியம், மஞ்சள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூல பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும்.

விநாயகர் சூழலுடன் மிகுந்த நட்புறவான கடவுள். எந்த மண்ணில் இருந்து உருவெடுத்தாரோ அதனுள்ளேயே மீண்டும் கரைந்திட விரும்புகிறார். அவர் கரைந்து போக இயற்கையான பொருட்களால் அவர் உருவம் உருவாக்கப்பட வேண்டும்.

ஒரு கடவுளை உருவாக்கி, அதை நீரில் கரைக்கும் சுதந்திரத்தை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை நமக்கு வழங்குகிறது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும். நம் கலாசாரத்தை பாதுகாப்பதற்கும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கும், இதுவே சிறந்த வழி. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here