துப்பு கொடுத்தால் சன்மானம்

0
832

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தன் பகுதியில் முஸ்லிம்கள் செய்யும் மதமாற்றத்தை தட்டி கேட்டதால் முஸ்லிம் பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தேசம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர். திருபுவனத்தைச் சேர்ந்த ரஹ்மான் சாதிக், முகமது அலி ஜின்னா, கும்பகோணத்தைச் சேர்ந்த அப்துல் மஜீத், பாபநாசத்தைச் சேர்ந்த புஹானுத்தீன், திருவிடைமருதூரைச் சேர்ந்த சாஹுல் ஹமீது மற்றும்நஃபில் ஹாசன் ஆகிய இந்த 5 பேரின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ள தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ, இந்த பயங்கரவாதிகளை பற்றி தகவல் கொடுத்தால் ஒரு நபருக்கு தலா ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 5 லட்சம் சன்மானத்தை அறிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here