சுவாமி சிலைகள் சேதம்

0
713

புதுச்சேரியின் திருவள்ளுவர் நகர் வீதியில் அமைந்துள்ளது துலுக்காணத்தம்மன் கோயில். இக்கோயிலில் மாலை பூஜாரி வந்தபோது, அங்கிருந்த துர்கை அம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்ததை கண்டார். பின்னர் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரினை அடுத்து காவல்துறையினர் அருகில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்தனர். அதில் மூன்றுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் கோயிலுக்குள் நுழைந்து திரும்புவது பதிவாகி இருந்தது. இதனைக் கொண்டு சுவாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here