சிடிஎஸ் ஜெனரல் ராவத்துக்கு முழு ராணுவ மரியாதையுடன் நடை பெற்ற இறுதி சடங்குகள்

0
255

 தில்லி கன்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் உள்ள மயானத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்  செய்யப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத்துக்கு தேசம் பிரியாவிடை கொடுத்தது. ராணுவ நெறிமுறையின்படி, ஜெனரல் ராவத்துக்கு 17 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது, இந்நிகழ்ச்சியில்  800 வீரர்கள் கலந்து கொண்டனர். ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதிச் சடங்குகளை அவரது மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி செய்தனர்.

       தமிழ்நாட்டின் குன்னூர் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஜெனரல் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப்படை வீரர்களுடன் புதன்கிழமை உயிரிழந்தார்.

        உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ராவத் மற்றும் அவரது மனைவி உடல்களுக்கு இறுதி அஞ்சலி செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here