பகவத் கீதா ஜெயந்தி

0
358

       இன்று கீதா ஜெயந்தி. ஆண்டுதோறும் மார்க்ச்சீர்ஷ மாதம் வளர்பிறை 11ம் நாள் கீதா ஜெயந்தியாகக்க்கொண்டடப்படுகிறது. இந்த நாளில் தான் பகவத் கீதைபகவான் கிருஷ்ணனால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது.
      பகவத் கீதை பிரபஞ்சத்திற்கு அடிப்படை. மனித குலத்திற்கே நல்வழிகாட்டி.ஒருவன் கடவுளை சரணாகதி செய்யும்போதுஅவனுக்கு அழிவில்லை. பகவத் கீதையின் ஒவ்வொரு ஸ்லோகமும் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு தரும் வல்லமை உடையவை. வாழ்க்கைக்கு தேவையான பல படிப்பினைகளை பகவத் கீதை கொண்டுள்ளது. வாழ்க்கையை சரியான கண்ணோட்டத்துடன் அணுகுவதற்கு உதவுகிறது. மாற்றம் என்பதே இயற்கையின் நியதி,அமைதியை கடைபிடி,உலகின் நன்மைக்காக உழை,பயமற்று இரு,எதுவுமே நிலையற்றது,கோபத்தை விடுவாய் போன்ற உபதேசங்களை பகவத் கீதை நமக்கு தருகிறது.

         இந்த கீதா ஜெயந்தி நன்னாளில் பகவத் கீதை நமக்களித்த விழுமங்களை ஏற்றுக்கொண்டு வாழவேண்டும் என்ற உறுதியை மேற்கொள்வோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here