12ஆம் வகுப்பு கணக்குபதிவியல்(Accountancy) தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள் இல்லை: போலிச்செய்தி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

0
375

12ஆம் வகுப்பு கணக்குபதிவியல்(Accountancy) தேர்வுத்தாளில் ஏற்பட்ட பிழையால் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவும் போலி ஆடியோ குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

     “டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற 12-ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முதல் பருவ தேர்வு கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழை காரணமாக, சிபிஎஸ்இ, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் என்ற பெயரில் ஆடியோ செய்தியை மேற்கோள் காட்டி போலியான செய்திகள் பரப்பப்படுவதாக வாரியத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 06 கருணை மதிப்பெண்கள் வரை வழங்கப்படும் என்று ஆடியோ செய்தியில் உள்ளதாக தெரிகிறது. இது போன்ற செய்திகளை நம்ப வேண்டாம்” என்று வாரியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here