மத சுதந்திரத்திற்கான பாதுகாப்பு மசோதா:கர்நாடகா சட்டசபையில் தாக்கல்

0
488

காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பிற்கு மத்தியில் மத மாற்ற எதிர்ப்பு மசோதா  டிசம்பர் 21 செவ்வாய்கிழமை கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மத சுதந்திரத்திற்கான கர்நாடகா பாதுகாப்பு மசோதா, 2021 டிசம்பர் 20, திங்கட்கிழமை கர்நாடக அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் புதன்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     ஆர்வலர்கள், குடிமக்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் இந்த மசோதா மீது மாறுபட்ட கருத்துக்களை  வெளிப்படுத்தியுள்ளனர், இது தவறான சித்தரிப்பு, பலாத்காரம், தேவையற்ற செல்வாக்கு, வற்புறுத்தல், வசீகரம் அல்லது மோசடியான வழிமுறைகளால் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு “சட்டவிரோதமாக மாறுவதை” தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்த மசோதா , உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களை விடவும் கடுமையானதாக  உள்ளது,. உத்தரபிரதேசத்தில் அறிமுகபடுத்தப்பட்ட சட்டத்தின் படி  குறைந்தபட்சம் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும். ஆனால் கர்நாடகாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இச்சட்டத்தின் படி குறைந்தபட்ச தண்டனை மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் மற்றும் குறைந்தபட்ச அபராதம் ரூ 25,000 விதிக்கப்படும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here