பாரதப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் சுய-தந்திரம் ஏற்படுத்த வேண்டும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில பாரத பௌத்திக் சிக்ஷண் ப்ரமுக் ஸ்ரீ ஸ்வாந்த ரஞ்சன்ஜி

0
162

ஜெய்பூர்; பாரதத்தின் தனித்தன்மையை உலகம் முழுவதும் அதிகரிக்கச் செய்ய சுதந்திரத்திலிருந்து சுய -தந்திரத்தை நோக்கி செல்ல வேண்டும் .அது நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்துக்கு உகந்த அளவில் இருக்க வேண்டும் .என ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் அகில பாரத பௌத்திக் சிக்ஷண் ப்ரமுக் ஸ்ரீ ஸ்வாந்த ரஞ்சன்ஜி கூறினார் .ஞாயிற்றுக்கிழமை ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் வித்யாதர் பாக்கில் நடைபெற்ற” சுராஜ் 75 சுதந்திரத்திலிருந்து சுய- தந்திரம் நோக்கி” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கற்றோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.அவர் மேலும் பேசும் போது நமது நாட்டில் பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் ,போர்ச்சுக்கீசியர்கள் ,ஆங்கிலேயர்கள் என எல்லோரும் வந்தனர் தங்கள் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு பாரதத்திலிருந்து பொருளாதாரத்தை சுரண்டிச் சென்றனர் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here