கொரோனா பரவல்:உத்தரபிரதேசத்தில் டிசம்பர் 25 முதல் இரவு ஊரடங்கு

0
168

     பல மாநிலங்களில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 25 முதல் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு உட்பட கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான உத்தரவுகளை உ.பி முதல்வர் வெள்ளிக்கிழமை பிறப்பித்தார்.

       இரவு ஊரடங்கு சட்டம் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

      உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய முதல்வர், திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை 200 ஆகக் கட்டுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here