தேசிய கல்விகொள்கையை அமல்படுத்துவது வித்யா பாரதியின் முக்கிய பொறுப்பாகும் என்று வித்யா பாரதியின் அகில பாரதிய இணை அமைப்பாளர் கோவிந்த் மகந்த்ஜி கூறியுள்ளார். தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதன் ஒரு அங்கமாக ஜலந்தரில் நான்கு நாட்கள் ஆசிரியர் பயிற்சி பட்டறை டிசம்பர் 30ம் தேதி துவங்கியது. இதை துவக்கி வைத்து பேசிய கோவிந்த் மகந்த்ஜி தேசிய கல்விக்கொள்கை கல்வி இந்திய மயமக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அதை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வித்யாபாரதி வடக்கு மண்டல பொதுச்செயலாளர் தேஷ்ராஜ் சர்மா,துணைத் தலைவர் சுரேந்திர அத்ரி மற்றும் வித்யாபாரதி பஞ்சாப் தலைவர் ஜெய்தேவ் வதீஷ் ஆகியோர் கோவிந்த் மஹந்த் ஜிக்கு மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
Home Breaking News தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது வித்யாபாரதியின் முக்கிய கடமை- வித்யாபாரதி இணை அமைப்பாளர் பேச்சு