காஷ்மீர்-வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி

0
282

     வைஷ்ணவி தேவி கோயில் காஷ்மீரில் உள்ள கத்ரா பகுதியில் அமைந்துள்ளது. இந்தக்கோயிலில் இன்று அதிகாலை 2.45 மணிக்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிர் இழந்தனர்,மேலும் 13 காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நாராயணா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ANI வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இச்சம்பவத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ50000யும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here