கட்டுரை-சேஷாத்திரி சுவாமிகள் 

0
510

இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர். இவர் சமாதி அடைந்த இடம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது. சேஷாத்திரி சுவாமிகளை காஞ்சி காமாட்சியின் அவதாரம் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இவர் தன்னுடைய 19வது வயதில் கிபி 1889ல் திருவண்ணாமலைக்கு வந்தார். அதன்பின்பு திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து மறைந்தார். இவர் இரமண மகரிஷி பாதாள லிங்க சந்நதியில் அமர்ந்து தியானத்தில் இருந்தபோது, அவரை மீட்டார்.

இவர் வரதராஜன் – மரகதம்பாள் தம்பதியினருக்கு 1870 ஜனவரி 22ம் நாள் உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் பிறந்தார். இவர் பிறந்தது சனிக்கிழமை, ஹஸ்த நட்சத்திரமாகும். சாஸ்திரங்களைக் கற்று வல்லவராக இருந்தார். சேஷாத்ரியின் 14 வயதில் அவருடைய தகப்பனார் இறந்துவிட்டார். திருமண ஏற்பாடுகள் நடைபெற இருந்தபோது அவருடைய ஜாகத்தினைக் கணித்தவர்கள், இவர் சன்னியாசியாக மாறி யோகியாகக் கூடியவர் என்றார்கள்.

இவருடைய தாயார் இறக்கும்போது அருணாசல, அருணாசல, அருணாசல என மூன்று முறை கூறிவிட்டு உயர்துறந்தார். இதனால் அண்ணாமலை சேஷாத்திரியின் மனதில் ஆழப்பதிந்து திருவண்ணாமலைக்கு வந்தார்,

திருவண்ணாமலையில் வந்து சித்துகளை செய்துகாட்டினார். அவருடைய சித்துகளை அறிந்த மக்கள் அவரிடம் வந்தார்கள். நல்லவர்களுக்கு நல்வாக்கும், தீயவர்களுக்கு கொடுஞ்சொற்களும் கூறினார். மனநிலை சரியில்லாதவர் போல வேகமாக சிரிப்பதும், ஓடுவதும், தன்னைப் பார்க்க வருகின்றவர்களை கட்டியணைத்தல், கன்னத்தில் அறைதல், எச்சில் உமிழ்தல் என செய்வார்.

ரமணரை காப்பாற்றுதல்

ரமண மகரிஷி சிறுவயதில், திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் இருந்த பாதாள லிங்க சன்னதியில் தவமிருந்தார். அவரின் ஆழ்ந்த தவம் நீண்ட நாட்களாக இருந்தமையால், அவரைச் சுற்றி பல்லி, பாம்பு போன்ற உயிரினங்கள் அண்டின. பல நாட்களாக உணவும் நீரும் எடுத்துக் கொள்ளாமல் இருந்த ரமணரை சேஷாத்திரி சாமிகள் காப்பாற்றி, உலகிற்கு ரமணரை அறிமுகம் செய்தார்.

 

முக்தியடைதல்

கிபி 1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் நாள் பக்தர்கள் அனைவரும் ஒன்றுகூடி சேஷாத்திரி சாமிகளுக்கு அபிஷேகம் செய்ய கோரிக்கை வைத்தனர். முதலில் சுவாமிகள் மறுத்தாலும் பின்பு பக்தர்களின் வற்புறுத்துதலால் ஏற்றுக்கொண்டார். பக்தர்கள் பலர் குடம்குடமாக அபிஷேகங்களை செய்து அலங்கரித்தனர். அந்த அபிஷேகத்தின் குளிர்ச்சியால் சேஷாத்திரி சாமிகளுக்கு குளிர் காய்ச்சல் வந்தது. உணவோ, நீரோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். பக்தர்கள் கம்பளி கொடுத்தாலும் போர்த்திக் கொள்ளாமல் இருந்தார். கிபி 1929ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் நாள் வெள்ளிக்கிழமை ஹஸ்த நட்சத்திரத்தன்று முக்தி அடைந்தார். முக்தி நாள் தமிழ் மாதமான மார்கழி மாதம் 21ம் நாளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here