ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ராவிற்கு விருதுகள்: தந்தை பெருமிதம்

0
374

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பத்மஸ்ரீ மற்றும் பரம் விசிஷ்ட் சேவா விருதுகள் அளிக்கப்பட்டிருப்பது குறித்து அவரது தந்தை தனது வரவேற்பை தெரிவித்துள்ளார்.
நீரஜ் சோப்ரா டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம்,ஒலிம்பிக்கில் தடகளபோட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ராணுவத்தில் சுபேதாராகவும் உள்ள இவர் பரம் விசிஷ்ட் சேவா விருதையும் பெற்றுள்ளார். அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பெருமை அளிப்பதாக அவரது தந்தை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here