குண்டூரில் பரபரப்பு ஜின்னா டவரில் தேசியக்கொடியை ஏற்ற முயற்சி-இந்து அமைப்பினர் கைது

0
459

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஜின்னா டவர் அமைந்துள்ளது. இந்திய பிரிவினைக்கு காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா பெயரில் அமைந்திருக்கும் இந்த டவருக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜின்னா டவரில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டவாறே திரளாக வந்து ஜின்னா டவர் மீது தேசியக் கொடியை ஏற்ற முயற்சி செய்தனர். பின்னர் போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார், சில மணி நேரங்களுக்கு பின்னர் விடுவித்தனர். தற்போது அதற்கு மூவர்ண பெயிண்ட் அடித்து அதன் அருகில் கொடிக்கம்பம் ஊன்றி தேசியக்கொடியை பறக்க விட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here