பெண்களின் அச்சத்தை போக்கி உண்மையான மரியாதை வழங்கிய யோகி அரசு: பிரதமர் மோடி பிரசாரம்

0
403

உ.பி.,யில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல், அவமதிப்பு செய்வது மிகவும் சாதாரணமாக இருந்ததாகவும், அந்த அச்சத்தில் இருந்து பெண்களை விடுவித்து அவர்களுக்கு உண்மையான மரியாதையை வழங்கியது யோகியின் அரசு என பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் காணொளி வாயிலாக பிரதமர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் இங்குள்ள தொழிலதிபர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க எங்கள் அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உ.பி.,யில் முன்பெல்லாம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல், அவமதிப்பு செய்வது மிகவும் சாதாரணமாக இருந்தது. அந்த அச்சத்தில் இருந்து பெண்களை விடுவித்தது முதல்வர் யோகியின் அரசு. பெண்களுக்கு உண்மையான மரியாதையை வழங்கியது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here