ஹிஜாப் சர்ச்சை குறித்து விஹெச்பி கருத்து

0
587

கர்நாடகாவின் உடுப்பியில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை உண்மையில் ஹிஜாப் என்ற போர்வையில் ஜிஹாதி அராஜகத்தை பரப்புவதற்கான ஒரு தந்திரம் என்று விஹெச்பி தெரிவித்துள்ளது. விஎச்பியின் மத்திய இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின் இதை ‘ஹிஜாப் ஜிஹாத்’ என்றுதான் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
பிஎஃப்ஐ போன்ற ஜிகாதி அமைப்புகள் கர்நாடகம் முழுவதும் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்க பெரிய சதித்திட்டத்தை தீட்டி வருகின்றன. பாகல்கோட் போன்ற பல இடங்களில் ஜிஹாதிகள் நடத்திய கல்வீச்சு இதற்கு நேரடிச் சான்று. இந்து சமுதாயமும் , நாட்டினரும்ம் விழிப்புணர்வோடும் இருந்து இந்த சதிச்செயலை வெற்றியடைய அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here