தொகுதி மக்களை மிரட்டிய அமைச்சர் துரைமுருகன்? : தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சர்ச்சை பேச்சு

0
480

திமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் 5 ஆண்டுகளுக்கு வாணியம்பாடி புறக்கணிக்கப்படும் என தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துரைமுருகன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பொழுது அவர் வாணியம்பாடியில் பரப்புரையில் பேசிய போது, “மக்களை பார்த்து நீங்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் இந்த வாணியம்பாடிக்கு எந்த சலுகையும் செய்யப்படாது. ஐந்து வருடத்திற்கு ஓரங்கட்டி விடுவோம்” என்று பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here