உக்ரைனில் இருந்து தனது மகள் திரும்பியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் நிதிக்கு அவளின் தந்தை நிதி வழங்கியுள்ளார்.
இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூரை சேர்ந்தவர் அங்கிதா. உக்ரைனில் படித்து வரும் இவர் “ஆபரேஷன் கங்கா” திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இவரின் தந்தைபிரதமர் நிதிக்கு(PM cares fund) 21000ரூபாயும்,(இமாச்சல மாநில) முதல்வர் நிதிக்கு 11000ரூபாயும் வழங்கியுள்ளார்.