தலித் ஹிந்துவா..கிறிஸ்துவரா? சென்னை மேயர் ப்ரியா ராஜன்.,

0
512

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ப்ரியா ராஜன், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். தமிழக தேர்தல் கமிஷனுக்கு பொய் தகவலை கொடுத்துள்ளார். தலித் மக்களுக்கு அரசு வழங்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள், அவர்கள் மதம் மாறினால் கிடைக்காது என்ற நிலை இருப்பதால், மதம் மாறியவர்கள் தொடர்ந்து, ஹிந்து மதத்தில் நீடிப்பது போல காட்டி வருகின்றனர்.
பெரம்பூர் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. செங்கை சிவம், கிறிஸ்துவர். தன் அன்றாட வாழ்வில் அந்த மதத்தை பின்பற்றுபவர். ஞாயிறு தோறும் சர்ச்சுக்கு சென்று வருபவர் என்ற தகவல் தெரிய வர, அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
‘நான் கிறிஸ்துவர் அல்ல; ஹிந்து மதத்தை சேர்ந்தவன்; ஹிந்துவாக தான் இருக்கிறேன்’ என்று கூறிய செங்கை சிவம், ஆரிய சமாஜத்தில் இருந்து கடிதம் வாங்கி கொடுத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here