ஆப்கானிஸ்தான் பள்ளிகளில் சிறுமியருக்கு மீண்டும் தடைவிதித்த தலிபான்கள்

0
422

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பள்ளிகளில் சிறுமியருக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து, 6ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவியர், தங்கள் பள்ளிகளுக்கு நேற்று காலை மகிழ்ச்சியுடன் சென்றனர். எனினும், அடுத்த சில மணி நேரத்தில், தலிபான்கள் தங்கள் முடிவை மாற்றினர். பள்ளிகளில், 6ம் வகுப்புக்கு மேல் பயிலும் சிறுமியருக்கு மீண்டும் தடை விதிக்கப்படுவதாக அவர்கள் அறிவித்தனர்.பின், ஆசிரியர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து, மாணவியர் அனைவரும் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். தலிபான் ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கைகக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here