வங்கதேசத்திலிருந்து சட்ட விரோத ஊடுருவல் : 11 பேர் கைது

0
87

பாரதத்திற்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய 7 வங்கதேசத்தவர்கள், 4 ரோஹிங்யாக்களை திரிபுரா எல்லை அருகில் நமது பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் முறையான ஆவணங் கள் எதுவும் இல்லை. அவர்கள் பாரதத்திற்குள் ஊடுருவிட உதவிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், பீஹார் & ஜார்கண்ட் மாநிலங்களுக்குள் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக நமது நாட்டிற்குள் ஊடுருவல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மியான்மரில் இராணுவ ஆட்சி நடை பெறுவதால் பல்லாயிரக் கணக்கான குக்கி & மிசோ இனத்தவர் மியான்மரில் இருந்து அகதிகளாக மிசோரம் & மணிப்பூரில் குவிந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் மமதாவின் அரசியலே வங்கதேச ஊடுருவல்காரர்கள் & முஸ்லீம்களை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகிறது.சட்ட விரோதமாக ஊடுருவிய இவர்கள் ரேஷன், ஆதார், வாக்காளர் அடையாள வைத்துள்ளனர்.இது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here