வாரிசு அரசியலை வேரறுப்போம்: பிரதமர் மோடி பிரகடனம்

0
406

பாஜ அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரே தேசம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். இந்தியாவை மாற்ற முடியாது என்ற கருத்தை நாம் முறியடித்துள்ளோம். நாடு மாற்றம் கண்டு வருவதுடன், தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது. உலகில் 180 கோடி தடுப்பூசி போட்ட நாடு நமது நாடு மட்டுமே. ஏழை மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளோம். பா.ஜ.,வின் வெற்றியை பெண்கள் கொண்டாடுகின்றனர். பெண்களுக்கு புதிய அதிகாரம், சுகாதார வசதிகள், ரேசன், அதிகாரத்தை அளித்துள்ளோம். நிதி சுதந்திரம் கிடைத்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தான் நமது முக்கிய நோக்கம்.வாரிசுகள் லாபம் பெற வேண்டும் என்பதற்காக சில கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஓட்டு வங்கி அரசியலை நாம் மாற்றினோம். வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள் இந்திய அரசியல் சாசனத்தை மதிப்பது இல்லை. வாரிசு அரசியலால் இந்தியா பாழாகிவிட்டது. வாரிசு அரசியலை வேரறுப்போம். அதனை எதிர்த்து அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., போராடும். அரசியல் மாண்புகளை, அனைத்து மாநிலங்களிலும் நிலை நிறுத்துவம் வாரிசுகளின் ஆட்சிக்கு எதிராக பா.ஜ., மட்டுமே பணியாற்றும். பிரதமர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here