மதுரை சித்திரை திருவிழாவில் ஆர்.எஸ்.எஸ்

0
312

மதுரை சித்திரை திருவிழா மிக மிக பிரபலமானது நாம் அனைவரும் அறிந்ததே. பல வருடங்களாக மதுரை மதிச்சியம் ஷாகா ஸ்வயம்சேவகர்கள் நீர்மோர் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், மருத்துவ சேவை செய்தல், ஆகியவை தொடர்ந்து செய்து வருகிறார்கள். மேலும் கிருஷ்ணாபுரம் காலனி புதூர் ஸ்வயம்சேவகர்கள் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் நீர்மோர் வழங்குதல் அவசர மருத்துவ உதவி ஆகியவை செய்து வருகிறார்கள். மேலும் இவ்வருடத்தில் காலை 10 மணி அளவில் ஸ்ரீ கள்ளழகருக்கு தீர்த்தவாரி சமயத்தில் பல பக்தர்கள் வைகை ஆற்றில் மூழ்கும் சூழ்நிலையில் மதிச்சியம் ஸ்வயம்சேவகர்கள் 18 பேர் கொண்ட குழு மற்றும் அருகில் உள்ள பெரியோர்கள் 8 பேர் இணைந்து 3 மணி நேரம் அவர்களை காப்பாற்றி உயிரிழப்பு இல்லாமல் செய்துள்ளார்கள். இந்த சேவை பணிகள் மதுரை மஹாநகர் ஸக காரியவாஹ் ஶ்ரீ ராஜசேகர் ஜி வழிகாட்டுதலில் நடைபெறுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here