இந்தியாவை தாக்கினால் யாரும் தப்ப முடியாது; ராஜ்நாத் எச்சரிக்கை

0
169

அமெரிக்கா சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சான்பிரான்சிஸ்கோ நகரில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது. உலகின் 3 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் உருவெடுக்கும்.லடாக் எல்லையில் இந்திய வீரர்களின் தைரியத்தை உலக நாடுகள் பாராட்டின. இந்திய வீரர்கள் என்ன செய்தனர் என்பது பற்றியும், இரு நாட்டு அரசுகள் என்ன முடிவு எடுத்துள்ளன என்பது பற்றி வெளிப்படையாக கூற முடியாது. ஆனால், இந்தியாவை தாக்கினால், யாரையும் விட மாட்டோம் என்ற செய்தி மட்டும் சென்றுள்ளது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here