ஐடி விதியின் கீழ் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி 10 இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தான் சார்ந்த 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்

0
168

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இரண்டு தனி ஆணைகளின் கீழ் பதினாறு (16) யூடியூப் சார்ந்த செய்தி சேனல்களையும், ஒரு (1) பேஸ்புக் கணக்கையும் முடக்க அறிவுறுத்தல்களை வெளியிட்டது,முடக்கப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் பாகிஸ்தானை சேர்ந்த ஆறு மற்றும் பத்து இந்திய யூட்யூப் செய்தி சேனல்கள் மொத்த பார்வையாளர்கள் 68 கோடிக்கும் அதிகமானனர். தேசிய பாதுகாப்பு, இந்தியாவின் வெளிநாட்டு உறவுகள், நாட்டின் இன நல்லிணக்கம் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான விஷயங்களில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகளை பரப்ப இந்த சேனல்கள் பயன்படுத்தப்பட்டதாக கவனிக்கப்பட்டது. IT விதிகள், 2021 இன் விதி 18 இன் கீழ் எந்த டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளரும் அமைச்சகத்திற்கு தேவையான தகவல்களை கொடுக்கவில்லை எனத் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here