காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் , இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில், எல்லை தாண்டி அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.எல்லை பாதுகாப்பு படை டிஐஜி சந்து கூறியது இந்த சுரங்கப்பாதையை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர். அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பாதை அமைக்கப்பட்டது. சுமார் 150 மீ., நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதையை பாகிஸ்தானில் இருந்து தோண்டிய பயங்கரவாதிகள், வெளியேறும் பகுதியை பலப்படுத்த 21மணல் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மூழுவதும் உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.