அசாமில் ஆயுதமேந்திய குழுக்களில் இருந்து 9,000க்கும் மேற்பட்டோர் முக்கிய நீரோட்டத்தில் சேரசரணடைந்தனர் -மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

0
125

மத்திய மற்றும் அசாம் அரசுகள் போடோலாந்து ஒப்பந்தத்தின் 90 சதவீத விதிமுறைகளை நிறைவேற்றிவிட்டதாகவும், போடோலாந்து மக்கள் சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அதிகாரம் பெறுவார்கள் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

தமுல்பூர் (அஸ்ஸாம்) [இந்தியா], மே 9 (ஏஎன்ஐ): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை, அசாமில் மட்டும் ஆயுதக் குழுக்களில் இருந்து 9,000 க்கும் மேற்பட்டோர் சரணடைந்து, முக்கிய நீரோட்டத்தில் சேரத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தமுல்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர், “அஸ்ஸாமில் மட்டும் 9,000 க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்களில் இருந்து சரணடைந்து தேசிய நீரோட்டத்தில் சேரத் தேர்ந்தெடுத்துள்ளனர், மிக முக்கியமான உதாரணம் போடோ ஒப்பந்தம்.

“பயங்கரவாதம் மற்றும் குண்டுவெடிப்புகளிலிருந்து அசாம் விடுவிக்கப்படும் என்றும், கல்வி, தொழில், வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் குறித்த விவாதத்தை முன்னெடுப்போம் என்றும் நாங்கள் கூறியிருந்தோம். குறுகிய காலத்தில் மத்திய, அசாம் அரசுகள் போடோலாந்து ஒப்பந்தத்தின் 90 சதவீத விதிமுறைகளை நிறைவேற்றி விட்டதில் இன்று திருப்தி அடைகிறோம். போடோலாந்துடன் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்” என்று மத்திய அமைச்சர் கூறினார்.

“போடோலாந்து மக்கள் சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அதிகாரம் பெறுவார்கள் என்பதை நான் மீண்டும் உறுதியளிக்க விரும்புகிறேன். பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் மொழியின் வளர்ச்சி மாநிலத்தின் அக்கறை மட்டுமல்ல, மையத்தின் அக்கறையும் கூட,” என்று ஷா உரையாற்றினார்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், போடோ பிராந்தியத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் மத்திய, மாநில அரசுகள் உறுதி பூண்டுள்ளன.

தெற்கு வங்காளம், வடக்கு வங்காளம், கவுகாத்தி, ஷில்லாங், மணிப்பூர் மற்றும் கச்சார் ஆகிய பகுதிகளில் சுமார் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார். “திரிபுரா எல்லைக்கு இங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்கப்படும்” என்று ஷா கூறினார்.

காதி பொருட்கள் பற்றி மேலும் பேசிய ஷா, காதி மற்றும் கிராம தொழில் வாரிய பொருட்கள் 107 துணை ராணுவ கேண்டீன்களில் கிடைக்கும் என்றார்.

 

“காதி கிராமத் தொழில் வாரியம் கிராமப்புற வளர்ச்சிக்காக மட்டும் பாடுபடாமல், வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

 

முன்னதாக, மத்திய அமைச்சர் தமுல்பூரில் உள்ள BSF இன் சென்ட்ரல் ஒர்க்ஷாப் மற்றும் ஸ்டோரின் (CENWOSTO) பூமி பூஜையை நிகழ்த்தினார் மற்றும் CAPFs கேன்டீனில் காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளை திறந்து வைத்தார். (ANI)

தமிழில்: சகி

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here