சிறார்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

0
167

15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜன.,3ம் தேதி துவங்கியது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் 15 – 18 வயதினருக்கான கோவாக்சின் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தச்சொல்லி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here