டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ள முடியும்-பிரதமர்

0
393

டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ள முடியும் என பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட உள்ள இந்த டிஜிட்டல் கரன்சி, நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் கூறியிருந்தார். இந்நிலையில், பாஜக சார்பில் நடைபெற்ற சுயசார்பு பொருளாதார கருத்தரங்கில பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் கரன்சியை பணமாக மாற்றிக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here