ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலை வழக்கில் தீயணைப்புப் படை வீரர் கைது.

0
392

கேரளா பாலக்காடு மாவட்டம் மேலமுரியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் தனது டூவீலர் மெக்கானிக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசனை, 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சுமார் 20 இடங்களில் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீநிவாசனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், வழியிலேயே ஸ்ரீநிவாசன் உயிரிழந்தார் இக்கொலை தொடர்பாக சுமார் 20 பேரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். இந்த நிலையில்தான், கேரள மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படையில் பணிபுரியும் ஜிஷாத் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். கேரள மாநிலத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் கொலைக்கும் ஜிஷாத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here