திருப்பத்தூரில் பொறியியல் கல்லூரி மாணவன் அனஸ் அலியிடம் மத்திய உளவுத்துறை விசாரணை

0
359

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், நீலிக்கொல்லை மசூதி தெரு பகுதியை சேர்ந்த மீர்ஹிதாயாத்அலி மகன் அனஸ்அலி வயது (22) .பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். அதிகாலை மத்திய உளவுத்துறையான ஐ.பி., போலீசார் மற்றும் வேலூர் ஐ.பி., திருச்சி ஐ.பி., திருப்பத்தூர் கியூ பிரான்ச் போலீசார் அழைத்து சென்று அணைக்கட்டு போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மாணவரிடம் இருந்து 2 வெளிநாட்டு மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், லண்டன், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்களுடன் அந்த மாணவன் பேசி வந்தது தெரியவந்துள்ளது.
அவர்கள் யார் என்பது குறித்து உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here