பாரதியர்களின் ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதமே

0
173

சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து சுகாதார திட்ட அலுவலர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட ஆயுர்வேதிய வைத்திய முறைகளால் விரும்பத் தகாத விளைவுகள் ஏற்பட்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது .நம் நாட்டின் அதிகமான மக்கள் இயற்கையான வைத்திய முறையான ஆயுர்வேதத்தில் விரும்பினாலும் அரசாங்கம் பட்ஜெட் இல் இருந்து ஒதுக்கப்படும் நிதி 1.5% மட்டுமே.
எண்ணிலடங்காத நோய்கள் புதிது புதிதாக தோன்றுவதும் அதனை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதும் பக்க விளைவுகளை தான் தோற்றுவிக்கின்றன தவிர முன்னேற்றம் இல்லை .ஆகவே திட்டமிட்ட அடித்தளம் உள்ள ஆயுர்வேத மருந்துகளையும் வைத்திய முறைகளும் கடைபிடிப்பதன் மூலம் பல புதிய, பழைய, நோய்களையும் குணப்படுத்த முடியும். பல மருந்துகளின் மருத்துவ பலன்கள் அடங்கிய பட்டியலும் கூட கிடைக்கக் கூடியதாக உள்ளது.
Nutritional deficiency
உலகத்திலேயே ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகள் இந்தியாவில் தான் அதிகமாக உள்ளன. இங்கு குழந்தைகளுக்கு வரும் வியாதிகளில் 25 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாட்டால் வருவனவே. சிசு மரணத்திற்கு கூட தாயின் ஊட்டச்சத்து குறைவு காரணமாகும். குழந்தைகளுக்கு முழு அளவில் தாய்ப்பால் கிடைக்காததும் கூட பல நோய்களுக்கும் காரணமாகும். தற்போது குழந்தைகள் சாப்பிடும் உணவில் இருந்து அவர்களுக்கு தேவையான சத்து கிடைப்பதில்லை குழந்தைகள் உணவில் பால் மிக குறைவான அளவில் சேர்க்கப்படுகிறது. ஜீவாதி என்ற திட்டத்தின் மூலம் அஸ்வகந்தி சூரணம் ஆயுர்வேத மூலம் கொடுக்கப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது மட்டுமின்றி அநீமியா, ஊட்டச்சத்து குறைபாடு, போன்றவைகளும் கணிசமான அளவில் குறைந்துள்ளது இதன் மூலம் அடிக்கடி மருத்துவமனை செல்வதும் பள்ளி விடுப்பு எடுப்பதும் குறைந்துள்ளது.
அனிமியா இரத்த சோகையை தடுப்பதற்கான தேசிய ஊட்டச்சத்து மையம் தொடங்கி சில பத்தாண்டுகள் ஆகியும் கூட அதிகமான பெண்களும் குழந்தைகளும் ரத்த சோகைக்கு ஆளாகியுள்ளனர். இன்று 40 சதவீதம் பிரசவ கால மரணம் ரத்த சோகையால்தான் ஏற்படுகிறது .ஆயுர்வேத முறையில் உணவுகளும் மருந்து கொடுப்பது குழந்தைகள் பெண்கள் மற்றும் பேறுகால பெண்களுக்கு மிகவும் உபயோகமானதாக உள்ளது. ஆயுர்வேதத்தில் பல மருந்துகள் மாத்திரை வடிவிலும் ,பஸ்மா, மற்றும் அரிஷ்ட வடிவிலும் ,உள்ளன ஆரம்ப சுகாதார நிலையத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் மூலம் இவைகளை தர முடியும் .ரத்த சோகை இல்லாத பெண்களுக்கு பேறு காலம் மரணம் என்பது இல்லை அல்லது குறைந்துள்ளது. இந்த ஆயுர்வேத மூலம் சுகப்பிரசவமும் பிரசவத்திற்கு பிறகு ஆரோக்கியமான உடல் நிலையும் காணப்படுவது கண்கூடாக தெரிகிறது. குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறப்பது அபாயகரமானது. அறுவை சிகிச்சை முறை பெண்களுக்கு பல நோய்களுக்கும் சில மரணத்திற்கும் காரணமாக அமைகிறது. ரத்த சோகை மற்ற சத்து குறைவால்தான் அறுவை சிகிச்சை மூலம் பிறப்பு ஏற்படுகிறது .இதற்கு ஒரே தீர்வு அந்த காலங்களில் மரபு வழியாக ஒவ்வொரு ஊரிலும் இருந்து பயிற்சி பெற்ற மருத்துவச்சி (mid wife) என்று சொல்லக்கூடிய முறைகளை மீண்டும் கொண்டு வருவது தான். ஸ்வீடன் நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்த மரபு வழி மருத்துவச்சி மூலம் பிரசவ மரணத்தை குறைத்துள்ளது.
உலக அளவில் உள்ள சிசு மரணத்தில் 1/4 பங்கு இந்தியாவில் மட்டுமே நிகழ்கிறது. 5 வயதிற்கும் குறைவான சிசு மரணம் மூச்சுத்திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாகும். வருடத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிகமாக சிசு மரணத்திற்கு காரணம் மூச்சு திணறல் தான்(acute respiratory infection)(ARL) நோய் எதிர்ப்பு சக்தி குறைவிற்கு அலோபதி மருந்துகளை அடிக்கடி கொடுப்பதும் கூட ஒரு காரணமாகும் மூச்சு திணறல் வைரல் பாக்டீரியா முதலான நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் பக்க விளைவு ஏற்படுத்தாத மருந்துகள் உள்ளன மூச்சுத் திணறலுக்கு சிறந்த பாதுகாப்பான மருந்து ஆயுர்வேதத்தில் உள்ளது தொடர் வயிற்றுக் கடுப்பு தெரிந்தும் தெரியாததுமான பல கிருமிகளின் காரணமாக ஏற்படுகிறது .இந்த கடும் வயிற்றுப்போக்குக்கு(Acute Diarrheal Diseases) அவர்கள் கொடுக்கும் வாய்வழி நீரேற்றம் என்ற சிகிச்சை(oral rehydration therapy) எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஆயுர்வேதத்தில் இதற்கான மூல காரணமாக செரிமான கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் விரைவில் குணமாக்க முடியும். அதிகமான வைரல் காய்ச்சல்களுக்கு அலோபதியில் சரியான மருந்துகள் கிடையாது சமீபத்தில் வந்த கொரோனா ஆயுர்வேத மூலம் தான் குணப்படுத்தப்பட்டது தெரிந்த விஷயமே அறுவை சிகிச்சையில் கூட ஆயுர்வேதத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது எலும்பு முறிவுகள் கூட ஆயுர்வேத அறுவை சிகிச்சை மூலம் சரிப்படுத்த முடியும் மரபு வழி மூட்டு எலும்பு முறிவு சிகிச்சையில் கூட பல இடங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்

ஆயுர்வேதத்தில் நோயின் மூலத்தை அறிந்து குணப்படுத்துவார்கள் அலோபதியில் நோய்க்குப்பின் மருந்து கொடுக்கப்பட்டதற்கு பின்வரும் பக்க விளைவுகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு மருந்து கொடுப்பார்கள்.

                                                                                    ஸ்ரீ சந்திரசேகர் ஜி

                                                                                    balasekaran66@gmail.com                           

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here