சக்ஷம் அமைப்பு மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறது:ஆளுநர் ஆரிஃப் முஹம்மத் கான்

0
158

சக்ஷம்: மாற்றுத் திறனாளிகளின் மேம் பாட்டிற்காக ஸ்வயம்சேவகர்களால் தொடங்கப்பட்டு தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிற அமைப்பு.

கவர்னர் அவர்கள் எலமக்கரா, பாஸ்கரீயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சக்ஷம் தேசிய அளவிலான பிரதி நிதிகள் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்று பேசிய ஆரிஃப் முஹம்மத் கான் இரக்கம், தானம், தர்மம் ஆகியவை பாரதத்தின் அடிப்படை ஆதாரம். மதங்கள் பல இருக்கலாம். ஆனால் உண்மை ஒன்றே ஒன்றுதான் என்று குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத இணை பொதுச் செயலாளர் மா.முகுந்தா உட்பட சக்ஷம் பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here