லட்சுமணர் சிலை திறப்பு

0
58

ஜி20 மாநாடு, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்டவைகளை
சிறப்பாக நடத்த உத்தரப் பிரதேச அரசு தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக லக்னோ சர்வதேச விமான நிலையத்தையும் பிரதான சாலையையும் இணைக்கும் புதிய மேம்பாலம், விமான நிலையத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளை அழகுபடுத்தும் திட்டங்களை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கிவைத்தார். விமான நிலையத்தை சுற்றிலும் அழகுபடுத்தும் திட்டத்தில் விமான நிலையத்திற்கு வெளியே பகவான் ஸ்ரீராமரின் தம்பியான லட்சுமணனின் 12 அடி உயர சிலை கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்துவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here