துவாரகாவில் பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை

0
161

குஜராத் அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், ‘தேவபூமி துவாரகா காரிடார்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிக உயரமான கிருஷ்ணர் சிலை துவாரகா நகரில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காந்திநகரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் படேல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.மேலும், “இந்த பகுதியை மேற்கு அதில், பாரதத்தின் மிகப்பெரிய மத மையமாக மாற்றுவதற்கு ‘தேவபூமி துவாரகா காரிடாரை’ உருவாக்க குஜராத் பா.ஜ.க அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முதல்கட்டமாக, தொலைந்து போன துவாரகா நகரின் எச்சங்களை மக்கள் காணும் வகையில் ஒரு காட்சிக்கூடத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது” என தெரிவித்தார். இதன் முதல்கட்டப் பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here