ஷாஹி ஈத்கா மசூதியில் தொல்லியல் ஆய்வு

0
44

உத்தர பிரதேச மாநிலத்தில் கிருஷ்ண ஜென்ம பூமியான மதுராவில் கிருஷ்ணரின் கோயில் உள்ளது. அதையொட்டி ஷாஹி ஈத்கா மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி 1669ல் ஔரங்கசீப்பின் உத்தரவின்படி, கிருஷ்ண ஜென்ம பூமியில் முன்பு இருந்த கிருஷ்ணர் கோயிலை இடித்து விட்டு அதன் மீது தான் இந்த ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டது என்று புகார் உள்ளது. இதுகுறித்து மதுரா நீதிமன்றத்தில் ஹிந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர். அதில் ஹிந்து சேனா அமைப்பைச் சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது. அந்த மசூதிக்குள் நீதிமன்ற உத்தரவின்படி நடத்திய ஆய்வில் லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றதொரு ஆய்வை கிருஷ்ணர் ஜென்ம பூமியில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியிலும் நடத்த உத்தரவிட வேண்டும். கிருஷ்ண ஜென்ம பூமியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 13.37 ஏக்கர் நிலத்தை கத்ரா கேசவ் தேவ் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.மேலும், கிருஷ்ணரின் வரலாறு முதல் கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்டது வரையிலான வரலாற்று ஆவணங்களையும் நீதிமன்றத்திலும் ஆதாரமாக தாக்கல் செய்துள்ளார். கோயிலும் மசூதியும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அருகருகில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ள, 1968ல் கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சங்கத்துக்கும் ஷாஹி ஈத்கா மசூதி நிர்வாகத்துக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் விஷ்ணு குப்தா முறையிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த மதுரா நீதிமன்றம், “ஷாஹி ஈத்கா மசூதியில் இந்திய தொல்லியல் துறையினர் ஜனவரி 2ம் தேதிக்குப் பிறகு ஆய்வு நடத்தலாம். ஆய்வு அறிக்கையை ஜனவரி 20ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here