பாரதக் கலாச்சாரத்தின் ஒரு பகுதி

0
119

‘காலநிலை ஸ்மார்ட் கொள்கைகளுக்கான அடுத்த கட்டம்’ என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற ரைசினா உரையாடலில் பேசிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய இன்னும் 7 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், ஐ.நாவின் முக்கியமான தசாப்தத்தின் 3வது ஆண்டில் நாம் நுழையும்போது, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், பருவநிலை ஸ்மார்ட் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்துவதில் பாரதத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இயற்கையிலிருந்து உங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இயற்கை மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்ளதே தவிர பேராசையை அல்ல. நாம் குறைவாகப் பயன்படுத்துபவர்கள், நாம் பயன்படுத்துவதை மீண்டும் பயன்படுத்துபவர்கள். சுழற்சிப் பொருளாதாரம் பாரதக் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. பாரத மக்கள், என்றும் பூமியை நேசிப்பவர்கள் என்பதால்தான், உலக மக்கள்தொகையில் 17 சதவீதத்துக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடு, 1850 மற்றும் 2019க்கு இடையில் உலகளாவிய ஒட்டுமொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் வளர்ந்த நாடுகளின் பங்களிப்பு 60 சதவீதத்துக்கு எதிராக, வெறும் 4 சதவீதம் மட்டுமே பங்களித்துள்ளது. இன்றும் கூட, பாரதத்தின் தனிநபர் உமிழ்வு, உலகின் தனிநபர் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளது.

உலக அளவில், நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் பாரதம் 4வது இடத்திலும், காற்று சக்தியின் நிறுவப்பட்ட திறனில் 4வது இடத்திலும், சூரிய மின்சக்தி நிறுவப்பட்ட திறனில் 5வது இடத்திலும் உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், பாரதத்தின் சூரிய சக்தியின் நிறுவப்பட்ட திறன் 23 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 396 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜி20 தலைமைப் பொறுப்பை பாரதம் ஏற்றுள்ள நிலையில், சுற்றுச்சூழலின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு எவ்வாறு கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதற்கு பாரதம் ஒரு உலகளாவிய எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் பாரதம், 2015ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அதன் ஆரம்ப பிரகடனத்தை, காலக்கெடுவிற்கு 9 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவுசெய்த ஒரே ஜி20 உறுப்பு நாடாகமாறியது. சி.ஓ.பி 27 மாநாட்டில்நீண்ட கால குறைந்த உமிழ்வு மேம்பாட்டு உத்தி திட்டங்களுடன் இன்னும் அதிக லட்சிய இலக்குகளை அடைய முயலும் புதிய பிரகடனத்தையும் சமர்ப்பித்துள்ளது பாரதம். இதன் மூலம், புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட உறுதிமொழிகளைச் சமர்ப்பித்த 58 நாடுகளின் பட்டியலில் பாரதம் இணைந்துள்ளது” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here