கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் ‘டி1’ கோச்சில் மர்ம நபர் ஒருவர் அதில் பயணம் செய்தவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தான் . இதில் சஹாரா(2), ரஹ்மத், சவுபிக் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை பிடிக்க, போலீசார் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சி கொண்டு கம்பியூட்டரில் வரையப்பட்ட மாதிரி வரைப்படங்கள் வைத்து தேடி வந்தனர்.
தடயவியல் நிபுணர்கள் ஆய்வின் முடிவில் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஆக இருக்கலாம் என கூறினர். இதன் அடிப்படையில், உத்தரபிரதேசத்திற்கு சிறப்பு படை போலீசார் விரைந்தனர். தற்போது ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த, மர்மநபர் ஷாருக் சைபியை உ.பியில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.