ஶ்ரீ ஜெயந்த் சஹஸ்ரபுத்தே பாரத மாதாவின் திருவடிகளை அடைந்தார்

0
81

மூத்த சங்க ப்ரசாரக், விஞ்ஞான் பாரதி அமைப்பின் அகில பாரத அமைப்புச் செயலாளர் ஆக பணிபுரிந்து வந்த திரு. ஜெயந்த் சஹஸ்ரபுத்தே இன்று அதிகாலை 4 மணி அளவில் காலமாகி விட்டார்.
புது தில்லியில் கடந்த வருடம் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று நடந்த ஒரு வாகன விபத்தில் படுகாயமுற்ற அவர் கடந்த 9 மாதங்களாக மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை எதிர் பார்த்த பலனை அளிக்காததால் இன்று அதிகாலையில் பாரத மாதாவின் திருவடிகளை அடைந்தார். கொங்கண் ப்ராந்த பிரசாரக்காக இதற்கு முன்பு பணியாற்றியவர்.மும்பை யஷ்வந்த் பவனில் அவரது உடல் ஸ்வயம்சேவகர்கள் & பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இருக்கும். பின்னர் மாலையில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். ஶ்ரீ ஜெயந்த் சஹஸ்ரபுத்தேவின் ஆத்மா இறைவன் திருவடிகளை அடைந்து அமைதி பெற வேண்டுகிறேம். ஓம் சாந்தி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here