25 வயது புலி ” ராஜா ” மரணம்:

0
157

நமது நாட்டில் அதிக வருடம் வாழ்ந்த புலி (ராஜா என்பது அதன் பெயர்) இரு தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கம் அலிபூர்துர் வனவிலங்கு காப்பிடத்தில் மரணம் அடைந்தது. ராஜாவின் வயது 25 வருடம் 10 மாதங்கள்.
சுந்தர்பன் ஜல்தபாராவில் 2008 இல் முதலையால் தாக்கப்பட்டு காயமடைந்த ராஜா இங்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது. அப்போதிலிருந்து அலிதுர்பூர் வன விலங்குக் காப்பகத்தில் இருந்து வந்த ராஜா இரண்டு தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தது.
வனத்துறை அதிகாரிகள் அதற்கு அஞ்சலி செலுத்தி அதன் உடலைப் புதைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here